பொன்னூத்து அம்மன் - வற்றாத ஊற்று:-
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமடை அருகே வரப்பாளையம் கிராமம் அருகே அமைந்துள்ளளது இந்த மலைகோவில்..
கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமடை அருகே வரப்பாளையம் கிராமம் அருகே அமைந்துள்ளளது இந்த மலைகோவில்..
சுமார் 500 வருடங்களுக்கு முன்னர் காட்டில் விறகு சேகரிக்க சென்ற ஒரு சிறுமி காட்டில் உள்ள விலங்குகளால் துரத்தப்பட்டு சிறிய குகை போன்ற இடத்தில் தஞ்சம் அடைந்தார் ,இந்த சிறுமியை தேடி காட்டில் சென்ற கிராம மக்கள் அந்த குகையில் சுயம்பு அம்மனாக மாறி இருப்பதை பார்த்தனர்,அதோடு அந்த சுயம்பு அம்மன் இருந்த இடத்தின் பின்னால் 5 அடி கிணறு தோன்றி அதில் இருந்து நீர் பொங்கி பெருகுவதை பார்தனர்,மழை இல்லாது குடிநீர் பஞ்சம் நிலவி வந்த நிலையில் இந்த வத்தாத ஊற்று பொங்கி வந்து கிராம மக்களின் தாகத்தை தனித்த அந்த அம்மனை வழிபட்டனர்,அன்றில் இருந்து இன்று வரை எல்லா காலங்களிலும் அந்த ஊற்று வத்தியது இல்லை என தலைமுறை தலைமுறையாக பார்த்து வந்த அந்த கிராம மக்களின் கூற்று..கடந்த 5 வருடங்களில் நானும் வற்றி பார்தது இல்லை...
இந்த வற்றாத ஊற்றின் நீர் மிகவும் தெளிவாகவும், சுவையாகவும் இருக்கும் ,பாறைகளின் தாதுக்கள் நிறைந்து மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நீராகும்,இந்த கோவில் அமைந்துள்ள பகுதி மிகவும் அமைதியாகவும்,குளிர்ந்த காலநிலையுடன் இருக்கும்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்கும் உகந்த இடம்...நல்ல காற்று ,தூய நீர்,அமைதியான இடம் ,
யானைகள் அடிக்கடி வலம் வரும் பகுதி,காலை 7 மணிக்கு முன்னர்
மாலை 6 மணிக்கு பின்னர் யானைகள்,கரடிகள் அடிக்கடி உலாவும் பகுதி..எனவே அந்த நேரங்களில் செல்வதை தவிர்கவும்.
இந்த கோவிலில் இருந்து சுமார் அரைகிலோ மீட்டர் காட்டில் மேல் பகுதிக்கு நடந்து சென்றால் அங்கு ஒரு சிறிய அருவியை காணலாம்...போகும் வழி கொஞ்சம் கரடுமுரடான பாதை ,கவனம் தேவை,சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணிர் இருக்காது ,மேலே இருந்து வரும் அருவி நீர் பாறைகளின் அடியில் புகுந்து கடைசியாக கோயிலின் மேல உள்ள பாறையின் அடியே நீர் வருகிறது..இடையில் தண்ணீர் வரும் தடமே பார்க்க முடியாது ,வெறும் பாறையாக ,கல்லுமாக இருக்கும் ஆனால் அடியில் நீர் சென்று கொண்டு இருக்கும்...
மேலே உள்ள படத்தில் உள்ளது போல பாதை இருக்கும் ஆனால் அடியில் நீர் ஓடிக்கொண்டு இருக்கும்...அருவி தண்ணீர் கூட கோடைகாலங்களில் வற்றி போகும் ஆனால் அம்மனின் இருக்கும் இடத்தில் இருக்கும் சுனை நீர் எப்போதும் வற்றாது...இங்கே உள்ள மரங்களில் நிறைய பறவையினகளை காணலாம்...இந்த மலையின் உச்சியில் இருந்து மேற்கு பக்கமாக ஏறினால் மேல் மூடி ரங்கநாதர் கோயிலை அடையலாம்...அடர்ந்த வனப்பகுதியை தாண்டி செல்ல வேண்டும் எனவே தவிர்பது நல்லது...
சரக்கு அடிப்பதற்கு. மலையின் அடிவாரத்தில் நல்ல அருமையான இடங்கள் உள்ளது,பன்னிமடை மற்றும் சின்னதடாகம் சாலை அருகில் டாஸ்மாக் உள்ளது,தினமும் அன்னதானம் 12.30 முதல் 1.30 வரை நடைபெறும்.