Thursday, June 17, 2021

மேல்முடி திக் திக் பயணம்

மேல்முடி-திக் திக் பயணம்


இந்த இடத்துக்கு போறதுக்கு கொஞ்சம் நடக்கனும்,நடக்கனும் நடந்துகிட்டே இருக்கனும் ..பாதை கடினமா இருக்கேன்னு பயணத்த பாதியிலே கைவிட்டு சின்னதடாகம் டாஸ்மாக்ல போயி வயிறு முட்ட குடிச்சுட்டு டாஸ்மாக்லயே மலையேறுனவங்க சிலநூறு பேருங்க. கடினம் பார்காம மலையேறி சொர்கபுரிய ரசிச்சவங்க அதிகம் பேரு...

என்னதான் அங்க இருக்கு ? எதுக்கு அவ்வளவு தூரம் கஷ்டபட்டு 6 மணி நேரம் அடர்ந்த வனபகுதியில பயணம் பண்ணனும்? கொஞ்சம் தெளிவா பார்போம்..



 கோவை மாவட்டத்தின் சின்னதடாகம் பகுதியில் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாக கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4100 அடிகளுக்கு மேல் உள்ளது இந்த மேல்முடி..



ஆங்கிலேயர் காலத்திற்க்கு முன்பு வரை இந்த இடம்  முருகனின் வழிபாட்டு தலமாக இருந்துள்ளது, பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் அங்குள்ள சிலரால் ரங்கநாதர் வழிபாட்டுதலமாக மாற்றப்பட்டது,1973 ஆம் ஆண்டு கோவில் செப்பனிடும் பணிகள் தொடங்கி 1977 ஆண்டு குடமுழுக்கு திருவிழா நடத்தப்பட்டது...தற்போது முழுமையான பெருமாள் கோவிலாக மாற்றம் பெற்றது...



புரட்டாசி மாதத்தில் மட்டுமே இங்கு பக்தர்களை குறைந்த அளவில்  காணமுடியும் மற்ற மாதத்தில் இளைஞர் பட்டாளத்தை அதிகம் காணமுடியும்..


நவம்பர் ,டிசம்பர் ,ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் இருக்கும் ,மழை இருக்கும்..


இந்த இடத்தை அடைய 3 வழிகள் உள்ளது 


முதல் வழி:-

சின்னதடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூலைகளை கடந்து காட்டுவழியே நடந்து அடர்ந்த மலைமேல்  செல்லலாம்...வாகனங்களை சின்னதடாகம் பகுதியில் உள்ள பைக்,கார் ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ஒரு ஆட்டோ பிடித்து காடுதொடங்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் ,ரோடு இருக்காது மண் ரோடு மட்டும்தான்..




2.இரண்டாம் வழி

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனங்களை ஸ்டாண்டில் பத்திரமாக வைத்துவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து பாலமலை வழியாக பயணித்து அடர்ந்த காடுகள் வழியாக நடந்து செல்ல வேண்டும்..பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஆட்டோகாரரிடம் மேல்முடி செல்ல வேண்டும் என சொன்னால் போதும் அவர் மேல்முடி பயணம் தொடங்கம் பகுதியில் இறக்கிவிடுவார்..
அங்கிருந்து உங்கள் பயணத்தை தொடங்கலாம்

3.மூண்றாம் வழி

நரசிம்மநாயக்கபாளயத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து பூச்சியூர் வழியாக இராவுத்தகொல்லனூர் (ராவதனல்லூர்) அடைந்து மலையேறும் பகுதிக்கு வந்து அங்கிருந்து பயணம் மேற்கொள்ளலாம்..மற்ற இரண்டு வழிகளை காட்டிலும் இந்த பாதைவழியாக செல்வது நேரம் அதிகம்,தொலைவும் அதிகம்..ஆனால் இயற்கையை ரசிக்க நிறைய இடங்கள் உண்டு, திரில்லான டிரெக்கிங் செல்ல இந்த பாதை தேர்வு செய்யலாம்


யானைகள் ஜாக்கிரதை

மேற்கண்ட மூன்று வழித்தடங்களும் மிகவும் அடர்ந்த வனபகுதிகள் ஆகும்,காட்டு விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகள்.. குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது வழிகள் யானைகளின் வலைசை பாதைகளில் அமைந்துள்ளது.. யானைகள் ஜாக்கிரதை..முதலாம் வழியும் யானைகள் நடமாடும் பகுதியாகும்..குழுவாக பயணிப்பது நல்லது..வழிகாட்டியின் உதவியுடன் பயனிப்பது நல்லது...அதிர்ஷ்டம் இருந்தா சிறுத்தை ,கரடியை கூட காணலாம்...


சோறு முக்கியம்

சமையலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ளவும்..பாத்திரங்கள் தேவையில்லை..தேவையான பாத்திரங்கள் மேலே தங்கும் இடத்தில் பெற்று கொள்ளலாம்..சப்பாத்தி செய்து கொள்வது சாலசிறந்தது...


கத்தி,அருவாள் போன்ற பொருட்களை எடுத்து கொள்வது நல்லது..காட்டில் விழுந்து கிடக்கும் மரங்களின் கிளைகளை விறகாக வெட்டி சமையல் செய்யவும்..பயர் கேம்ப் (Fire Camp) செய்வதற்கு விறகு வெட்ட உதவும்..


அங்கு மின்சாரம் இருக்காது..நல்ல பவர் பேங்குகளை எடுத்து செல்வது உதவும்..

கொசுகடிக்கு ஓடோமாஸ் எடுத்து கொள்ளவும்..


மதுப்பிரியர்களும்,புகைபிரியர்களும் தேவைக்கு அதிகமாகவே வாங்கிவைத்து கொள்வது சிறந்தது..அங்கு சென்றால் எதுவுமே பத்தாது..

இரவின் கடுங்குளிரில் நடமாடி கூத்தடிக்க ரீசார்ஜபுல் Mp3 speaker எடுத்து செல்வது மிகுந்த நலம்..



டார்ச்லைட் முக்கியம்.வனத்துறையின் முன் அனுமதி சீட்டு முக்கியம்....


மேல்முடி 

அடர்ந்த மூலிகை  காடுகளின் வழியே  பயணித்து மிகவும் சோர்வடைந்து இருக்கும் உங்களை அந்த கோவில் இருக்கும் இடத்தின் மிகவும் குளிர்ந்த சூழ்நிலை உங்களை உற்சாகபடுத்தும்..அங்கு சென்றதும் ஏதோ சாதித்த உணர்வு ஏற்படும்..கோவிலுக்கு வெளியே மொத்தம் 4  தகர ஸெட்டுகள் இருக்கும் ,முதலில் வருபவர்கள் முன்னுரிமை நீங்கள் நல்ல ஸெட்டுகளை ஆக்கிரமித்து கொள்ளலாம்..பாத்திரங்களை கோவிலில் இருக்கும் நபரிடம் பெற்று கொள்ளலாம்...நீங்கள் தங்கும் இடத்திலேயே ஒரு குளிர்ந்த சிற்றோடை ஓடும்..குடிப்பதுக்கும்,உணவுக்கும் ,எல்லாத்துகும் அந்த சிற்றோடைதான்...

அடர்ந்த காட்டின் நடுவே இப்படி ஒரு இடத்தை பார்திருக்க வாய்பில்லை..

முதலாம் வழிதடத்தில் நீங்கள் பயணிக்கும் போது முததண்ணி,இரண்டாம் தண்ணி,மூண்றாம் தண்ணி என குறிப்பிட்ட இடைவெளியில் சிறிதளவு தண்ணீர் ஓடை உண்டு..அது மிகவும் குளிர்ச்சியான நீர்..பயணிக்கும் போது தாகம் தனிக்கும்..


மேலே நீங்கள் தங்குமிடம் மிகுந்த அமைதியாகவும், மிகவும் குளிர்ந்த சூழ்நிலையும இருக்கும்..காட்டெருமை தொந்தரவு எப்போதாவது இருக்கும்..

இரவில் சில சிவபானம் குடிக்கும் சிவபக்தர்கள்  இருப்பார்கள்..கவனம் தேவை..

நீங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலவில் ஒரு வியூவ் பாய்ண்டு இருக்கும்..அங்கிருந்து கோவையின் அழகை காணலாம்...கவனம் தேவை கரணம் தப்பினால் மரணம்...தடுப்பு சுவர் எதுவும் இல்லை..

நாடுகண்டபோடி

நீங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 1 மணி நேரம் பயணித்து இந்த நாடுகண்டபோடியை அடையலாம்..மலைமேல் பசுமையான புல்வெளில் சிவன் சிலையை காணலாம்..இந்த இடம் மிகவும் அழகானது..நெல்லி மரங்களும், மூலிகை மரங்களும் நிறைந்த பகுதி ,இந்த இடத்தில் இருந்து கோவையில் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்கலாம்...

போயி பார்த்தா தெரியும்...

இயற்கையை ரசிக்க இதவிட வேறு இடம் கோவைக்கு மிக அருகில இல்லை..இன்னும் சில இடங்கள் உள்ளது அதை நீங்கள் அங்கே சென்றதும் நீங்களே செல்வீர்கள்


திரும்பும் நேரம்

நீங்கள் மலையிறங்கும் போது கோவிலில் இருந்து மதியம் 12 மணிக்கு கண்டிபாக புறப்பட வேண்டும்..தாமதமாக மலை இறங்கினால் இருட்டுல் ,யானை தொந்தரவும் இருக்கும்...





Read More
My photo
பயணம் சென்ற இடங்களின் பதிவுகள்...
Prabhakaran.t. Powered by Blogger.

© மலைக்கோட்டை மாநகரம், AllRightsReserved.

Designed by ScreenWritersArena