Saturday, September 23, 2017

காந்தாரி மிளகு

காந்தாரி மிளகு(hot pepper)

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த காந்தாரி மிளகாய் சிறியதாக இருந்தாலும் மிகுந்த காரத்தை உடையது,
சீனிமிளகாய் என்றும் கூட இதை சொல்லுவார்கள்..கேரளாவில் இந்த மிளகாயை அதிகம் உபயோகபடுத்துகின்றனர்,
தமிழ்நாட்டில் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விளைகின்றது,மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளின் ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்க படுகிறது
அதிகமான காரத்தை போலவே இதன் விலையும் கொஞ்சம் அதிகம் கிலோ ரூ.450 முதல் ரூ.550 வரை விற்கப்படுகிறது..
பந்தலூர் பகுதிகளில் கிலோ ரூ200 முதல் ரூபாய்.250 வரை விற்கப்படுவதாக கேள்விப்பட்ட தகவல்..
ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் பங்கு அதிகம்.. இரத்தத்தை சுத்தபடுத்துவதாகவும்,கொழுப்பை குறைப்பதாகவும் சொல்கிறார்கள்,பழைய சோற்றிற்கு ஒரு மிளகாய் போதும்..கேரளாவில் அனைத்து இடங்களிலும் கிடைக்கும்..எங்கள் நண்பர் மோகன் அவர்கள் இதன் பிரியர்..அவர் சொல்லிதான் எனக்கே இப்படி ஒரு மிளகாய் இருப்பதே தெரியும்.








Read More

Tuesday, September 5, 2017

சிங்கம் ஹோட்டல், மதுரை

சிங்கம் ஹோட்டல்:

மதுரையில் இந்த ஹோட்டலை பற்றி தெரியாதவர்கள் யாரும் இல்லை..மதுரை குடிமகன்களுக்கு நல்ல பரிச்சயபட்ட ஒரு சிறந்த ஹோட்டல்..
மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் நரிமேடு என்ற இடத்தில் இந்தஹோட்டல் அமைந்துள்ளது,மாட்டுதாவணியில் இருந்து சுமார் 4கீ.மி தொலைவில் உள்ளது..இந்த ஹோட்டலின் எதிர்புறம் டாஸ்மாக் அமைந்துள்ளது மற்றுமொறு சிறப்பு..
நண்பர்கள் பிரேம்,கிரண்,கார்திக் அவர்களுடன் இந்த ஹோட்டலுக்கு விஜயம் செய்தோம்..உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சி.. எல்லா டேபிள்களிலும் சரக்கு அடித்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தனர்...மதுரையில இப்படி ஒரு ஹோட்டலா ? திடீரென மனதுக்குள் ஒரு பட்டாம்பூச்சி ...சந்தோசத்தில் காலியாக இருந்த டேபிளில் இடத்தை பிடித்து கொண்டு நால்வரும் உட்கார்ந்தோம்..2 நிமிடங்கள் கழித்து சப்பளையர் வந்தார்..கிளாஸ் போடட்டுமா என்று கேட்டார்..போடுங்க என்று சொல்லியவுடன் ..ஒரு சில்வர் டம்ளரின் உள்ளே சரக்கு அடிக்கும் டம்ளரை வைத்து கொடுதார் கூடவே தண்ணீர்..







பிறகு  புரோட்டா ஆர்டர் பண்ணினோம்..நாங்கள் வைத்து இருந்த சரக்கை கிளாசில் ஊத்தி புரோட்டாவிற்க்கு காத்திருந்தோம்..3 நிமிடத்தில் புரோட்டா & முந்திரி சிக்கன் குருமா வந்தது.. என்ன ஒரு சுவை..இப்படி ஒரு சுவையான புரோட்டா&குருமாவை சாப்பிட்டது முதல் முறை..அதிலும் சரக்கு அடித்து கொண்டு சுவையான உணவு உண்பது என்ன ஒரு பேரானந்தம்..சுவை ரொம்ப பிடித்துபோகவே அடுத்து அடுத்து புரோட்டா,வீச்சு,சிக்கன்,மட்டன் வகைகளை ஆர்டர் செய்து நன்றாக சாப்பிட்டு கொண்டு இருந்தோம்..எல்லா வகை உணவுகளும் இங்கே சிறந்த சுவை கொண்டு இருக்கும்..குடும்பாக சாப்பிடுவதற்கு ஹோட்டலின் வெளியே தனி இடம் உள்ளது..குடிமகன்களுக்கு தனி இடம்..மதுரையில் இப்படி ஒரு இடம் இருப்பது வெளியூர்வாசிகளுக்கு ஒரு ஆச்சரியம்..இதன் நிறுவனர் துரைசிங்கம் அவர்கள் காரைக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர்..பின்னர் மதுரையில் வந்து இந்த ஹோட்டலை நிறுவினார்..இவரது மறைவிற்கு பிறகு இவரது மகன் இந்த ஹோட்டலை நிருவகித்து வருகிறார்...சிங்கம் என்ற பெயருக்கு ஏற்ப சுவையிலும் இந்த ஹோட்டல் சிங்கமாக திகழ்கிறது..மதுரை சென்றால் கண்டிப்பாக செல்லுங்கள்..சரக்குகளை வெளியில் இருந்து வாங்கி கொண்டு வர வேண்டும்..அங்கு சரக்கு விற்பதில்லை...











Read More

Friday, September 1, 2017

கேத்தரின் நீர்வீழ்ச்சி

கேத்தரின் நீர்வீழ்ச்சி (Catharine Waterfalls):

இந்த நீர்வீழ்ச்சியை பற்றி நிறைய பேர்களுக்கு தெரிந்திருக்க கூடும்..இவ்விடத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு..
கோத்தகிரி போகும் வழியில் கோத்தகிரிக்கு 8 கிலோ மீட்டர் முன்னதாக "அரவேனு" என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தேயிலை காடுகளில் கீழ் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆண்டுக்கு எல்லா நாட்களிலும் தண்ணீர் மிக மிக குளிர்சியாக வந்துகொண்டு இருக்கும்,
மனதையும்,உடலையும் குளிர்சியாக வைத்துக்கொள்ள இந்த பகுதிக்கு போகலாம்..
ஊட்டி,மற்றும் கோத்தகிரியில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலைகளில் கூட இங்கு வறட்சி இன்றி தண்ணீர் வந்துகொண்டு இருக்கும்..வற்றாத அருவி ,வனத்துறையின் கட்டுபாட்டில் இவ்விடம் வராது என்பதால் எந்த தடைகளும் இன்றி சுதந்திரமாக குளித்து கொண்டாடலாம்,
சரக்கு அடித்து கொண்டு குளிக்கலாம்,
சரக்கு அடிப்பதற்க்கும் அருமையான இடம்,பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் மிகுந்த கவனம் தேவை..குளிர்மையான சூழ்நிலையில் குளிரான நீரில் குளிப்பது&குடிப்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்சியை தரும்,குற்றால அருவிகளை விட சிறந்த அருவி இந்த அருவி,
மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது ஊற்றுகளில் இருந்து உற்பத்தியாகும் அருவி.
இங்கு கடைகள் இல்லை என்பதால் அரவேனு பகுதிகளில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவைத்து கொள்ளவும்(உணவு,சிகரெட் மற்றும் இதர)
குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி அரவேனுவில் இருந்து இந்த அருவிக்கு போகும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது..
ஒருமுறை சென்றுவந்தால் தெரியும் இவ்விடத்தின் அருமை..போகும் வழியில் தேயிலை தோட்டங்களின் அழகையும்,சுத்தமான காற்றையும் அனுபவிக்கலாம்..
இந்த அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் மேட்டுப்பாளையம் பாவனி ஆற்றில் கலக்கிறது...
நண்பர்களுடன் செல்வதற்கு ஏற்ற இடம்
..மலை சிறுநாவல் பழமரங்கள் இவ்விடத்தில் அதிகமாக உள்ளது.












Read More
My photo
பயணம் சென்ற இடங்களின் பதிவுகள்...
Prabhakaran.t. Powered by Blogger.

© மலைக்கோட்டை மாநகரம், AllRightsReserved.

Designed by ScreenWritersArena