Friday, September 1, 2017

கேத்தரின் நீர்வீழ்ச்சி

கேத்தரின் நீர்வீழ்ச்சி (Catharine Waterfalls):

இந்த நீர்வீழ்ச்சியை பற்றி நிறைய பேர்களுக்கு தெரிந்திருக்க கூடும்..இவ்விடத்தை பற்றி தெரியாதவர்களுக்கு இந்த பதிவு..
கோத்தகிரி போகும் வழியில் கோத்தகிரிக்கு 8 கிலோ மீட்டர் முன்னதாக "அரவேனு" என்ற ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தேயிலை காடுகளில் கீழ் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியின் சிறப்பம்சம் என்னவென்றால் ஆண்டுக்கு எல்லா நாட்களிலும் தண்ணீர் மிக மிக குளிர்சியாக வந்துகொண்டு இருக்கும்,
மனதையும்,உடலையும் குளிர்சியாக வைத்துக்கொள்ள இந்த பகுதிக்கு போகலாம்..
ஊட்டி,மற்றும் கோத்தகிரியில் கடும் வறட்சி ஏற்படும் சூழ்நிலைகளில் கூட இங்கு வறட்சி இன்றி தண்ணீர் வந்துகொண்டு இருக்கும்..வற்றாத அருவி ,வனத்துறையின் கட்டுபாட்டில் இவ்விடம் வராது என்பதால் எந்த தடைகளும் இன்றி சுதந்திரமாக குளித்து கொண்டாடலாம்,
சரக்கு அடித்து கொண்டு குளிக்கலாம்,
சரக்கு அடிப்பதற்க்கும் அருமையான இடம்,பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் மிகுந்த கவனம் தேவை..குளிர்மையான சூழ்நிலையில் குளிரான நீரில் குளிப்பது&குடிப்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்சியை தரும்,குற்றால அருவிகளை விட சிறந்த அருவி இந்த அருவி,
மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது ஊற்றுகளில் இருந்து உற்பத்தியாகும் அருவி.
இங்கு கடைகள் இல்லை என்பதால் அரவேனு பகுதிகளில் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவைத்து கொள்ளவும்(உணவு,சிகரெட் மற்றும் இதர)
குடிமகன்களுக்கு ஒரு நற்செய்தி அரவேனுவில் இருந்து இந்த அருவிக்கு போகும் வழியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது..
ஒருமுறை சென்றுவந்தால் தெரியும் இவ்விடத்தின் அருமை..போகும் வழியில் தேயிலை தோட்டங்களின் அழகையும்,சுத்தமான காற்றையும் அனுபவிக்கலாம்..
இந்த அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் மேட்டுப்பாளையம் பாவனி ஆற்றில் கலக்கிறது...
நண்பர்களுடன் செல்வதற்கு ஏற்ற இடம்
..மலை சிறுநாவல் பழமரங்கள் இவ்விடத்தில் அதிகமாக உள்ளது.












0 comments:

My photo
பயணம் சென்ற இடங்களின் பதிவுகள்...
Prabhakaran.t. Powered by Blogger.

© மலைக்கோட்டை மாநகரம், AllRightsReserved.

Designed by ScreenWritersArena